6 மே, 2013

அட போங்கடா...


கேடி பில்லா  கில்லாடி ரங்கா...  

5  மாதங்களுக்கு முன்பு டெல்லி சம்பவம் [ பேருந்தில் மாணவி] நடந்த பின்பு அது தொடர்பான செய்திகள் பற்றி அலுவலகத்தில் பேசி கொண்டிருக்கும் போது ஒருவர் சொன்னார், " இதே மாதிரி சுமார் 30 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது,

இரண்டு பேர் சேர்ந்து ஒரு பையனையும், பெண்ணையும்  கடத்தி சென்று பெண்ணை பாழ்படுத்தி  கொன்று விட்டனர்.அந்த பெண்ணின் தந்தை ஒரு மிலிடரி ஆபீசர்.பிறகு குற்றவாளிகளை  கண்டு பிடித்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டனர்.

குற்றவாளிகள் பெயர்  "பில்லா & ரங்கா "

இந்த சம்பவத்திற்கு  பிறகு தான் ரஜினி நடித்த பில்லா படம் வந்தது.அந்த குற்றவாளியின் பெயரை கொண்டு என்றார்..

நான் அதை அப்போது  பெரிதாக கண்டு கொள்ள வில்லை...

இன்று " கேடி பில்லா & கில்லாடி ரங்கா " என்று புதிய படம் தொடர்பான விளம்பரம் கண்ட போது அன்று அவர் சொன்னது மனதிற்கு வந்தது.


அது பற்றி இணையத்தில்  தேடும் பொது  கிடைத்த  தகவல்கள் இந்த சுட்டியில் 

http://en.wikipedia.org/wiki/Geeta_and_Sanjay_Chopra_kidnapping_case

"The Geeta and Sanjay Chopra kidnapping case was a notorious crime in New Delhi in 1978. Two children, Geeta and Sanjay Chopra, were kidnapped by two young men, Ranga Khus (Kuljeet Singh) and Billa (Jasbir Singh), who planned to demand ransom from their parents. On finding that their father was a naval officer, they dropped the idea. To eliminate evidence, they subsequently murdered Sanjay, raped Geeta and then killed her as well. They then fled the city.[1] They were arrested on a train a few months later, tried and hanged for the crime in 1982.[2]"


மனதில் தோன்றிய சில கேள்விகள்...

எப்படி  இது போன்ற கேவலமான குற்றவாளியின் பெயரை தனது கதாபாத்திரம் & படத்தின் பெயராக வைத்து படம் எடுக்க அன்று உள்ளவர்களுக்கு  [நடிகர் & தயாரிபாளர்] தோன்றியது..?? 

வெறும் பப்ளிசிட்டி'காகவா?

சிவாஜி படத்தில் கூட ஒரு பாடலில் "பில்லா ரங்கா பாட்சா  தான்இவன் பிஸ்டல் பேசும் பேஸதான் " என்று ஒரு வரி கூட வரும்.

இன்று கூட ஒரு  புதிய திரைபடம் கூட இதே குற்றவாளிகள் பெயரில்...


நம்மையும் அறியாமல்  இரு பொறுக்கிகளை  ஏதோ ஹீரோக்கள்  ரேஞ்சுக்கு  உயர்த்திய நம்மவர்களை என்ன சொல்ல....

:-(