22 மார்ச், 2011

சாதீ... தீ யின் வடுக்கள்

சாதியின் அடையாளம் எந்த வடிவங்களில் இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாதது..
ஒரு மனிதனை அவனது சாதியினை வைத்து அடையாளம் காட்ட கூடாது..
சாதியின் கட்டமைப்பில் மேன்மையில் உள்ளதாக கூறும் மக்களையும் சரி, தாழ்த்த பட்டதாக கூறப்படும் மக்களையும் சரி விளையடுக்காக கூட சாதியின் அடையாளத்தை கொண்டு குறிப்பிட கூடாது.. 

///  அந்த பெண்  மிகவும் sportive,, எட்டாம் வகுப்பு படிப்பவள்  ..இந்த சிறு வயதில் சிந்தனைகளில்,செய்கைகளில் குறும்பும்,அழகான அறிவுதன்மையும்  ஒருங்கே மிளிரும்.படிப்பு மட்டும் அல்லாது எக்ஸ்ட்ரா curricular activities லும் மிகவும் ஆரவமுடன் பங்கேற்கும்.. அவள் அவளுடைய நண்பர்கள் வட்டத்தின் ராணி.. போன வாரம் ஒரு மாலை பொழுது..வழக்கமான உற்சாகம் மிஸ்ஸிங்.. 
                          என்ன ஆச்சு பிரியா..? 
                           "அண்ணா நான் பயங்கர mood outல இருக்கேன் . எங்க மிஸ் என மத்த வங்களுக்கு முன்னாடி insult பண்ணிட்டாங்க.. என்னோட caste / religion பத்தி சொல்லி என்னை குறிப்பிட்டாங்க..  எனக்கு ஒரு மாதிரி இருக்கு... அழுதுருவேன்'னு நினைக்கிறன்.. அழுகையா வருது ..கோவம் கோவம்á வருது. ஏன் என்ன மட்டும் அப்பிடி  சொல்றாங்க..?   
                              இத்தனைக்கும் அவள் படிக்கும் பள்ளிக்கூடம் அந்த சிட்டி'ல பெரிய பள்ளிகளில் ஒன்று- ஆங்கில வழி கல்வி கூடம்... ஒருவழியாக சமாதானம் ஆனாள்.. ஆனால் அந்த வடு கண்டிப்பா இருக்கும்..
                       ஏன் அந்த ஆசிரியருக்கு தோன்ற வில்லை,சாதியின் அடையாளங்களை வைத்து மற்றவர்களை குறிபிடுவது தவறு என்று..?
                         
கல்லுரி நாட்களில் உடனிருந்த நண்பனை நாங்கள் சாதியின் பெயராலே குறிப்பிடுவோம்.. ஐயர் என்று.. அவனும் மறுதலிப்பது இல்லை..
ஒரு வேலை அந்த சூழ்நிலையில் அவன் மைனாரிட்டி என்பதால் நாங்கள் எங்களது மெஜாரிட்டி மனப்பான்மையை அவனிடத்து காட்டினோமோ என்று என்ன தோன்றுகிறது. உடன் படிக்கும் பிராமின் பெண்ணை மாமி என்று கிண்டல் அடித்தோம் .. அந்த இனத்தின் மீதான வன்மம் இப்படியாக வெளிப்பட்டதோ..? வெளிபடுகிறதோ ..?
                               அது ஏன் ஒரு நாடார் பையனை , செட்டியார் பொண்ணை நாம் ஜாதி சொல்லி அழைப்பது இல்லை? எல்லாவிடங்களிலும் மாமி என்றும் ஐயரு என்றும் மிக எளிதாக அந்த சமுக சேர்ந்தவர்களை மட்டும் குறிப்பிடு கிறோமே ஏன்..??  //


// சாதியின் அடையாளத்தை கொண்டு குறிபிட்டால் வருந்தும் சிலர் ஒரு பக்கம்..
ஆனால் சாதியினை தன்னுடைய அடையாளமாய் காட்டுவதில் பெருமிதம் கொள்ளும் சிலர் ஒரு pakkam.
                     எங்கள் கல்லூரிக்கு ஒரு முறை ஒரு ------- பிள்ளை (இந்திய விண்வெளி ஆராய்சியில் பெரிய ஆளு )   அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்க வந்திருந்தார்கள் ..ஆடிடோரியத்தில் அனைத்து மாணவர்களும் குழுமியிருந்தோம்.. மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு (ஆங்கிலம்..)அவர் பதில் அளித்து கொண்டிருந்தார்..
                               நமக்கும்  ஆங்கிலத்துக்கும் ரெம்ப தூரம் ..(செம் மொழி கொண்டான்). பக்கதுல இருந்த ஷேக் கிட்ட "நாம எபோ நிலவுல கால எடுத்து வைப்போம்" இத எப்டி டா இங்கிலிஷ்ல கேக்குறது;னு கேட்டு, அவன் சொன்னத மனப்பாடம் பண்ணி நான் எந்திரிகறது குள்ள ஒரு தம்பி பயபுள்ள எந்திரிச்சு கேட்ருச்சு..                                                                              
                                 கொஞ்ச நேரம் கழிச்சு தான் மூளை'ல spark அடிச்சது.. மறுபடியும் ஷேக் கிட்ட "மச்சான் அவர் கிட்ட,  ____  ங்கிறது உங்க பேரு. அதூ என்ன சார் பிள்ளை'னு கடைசில..? நாட்டின் உயர்ந்த பதவில இருக்குற நீங்க இப்டி சாதிய அடையலாம வசுகிட்ட மத்தவங்க எப்டி சார் சாதிய மறப்பாங்க.."
இத  இங்கிலீஷ்'ல சொல்லிதா டா.. நான் கேக்குறேன் என்றேன்.
                                 அப்டியே முறைத்து பார்த்தவன் ,உனக்கு இன்டெர்னல் மார்க்ஸ் வேணும்á  இல்ல டிகிரி முடிக்காம அலைய போறிய.. உன் புரட்சி பேச்செல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோ என்று சொல்லி உடனே அவ்விடத்தை விட்டு அழைத்து சென்றான்..  //


ஆதிக்க சமுகம் மட்டுமா சாதியின் அடையாளத்தை பெயரில் வெளிபடுத்தும். நாங்களும் கூட என்று  ஒடுக்க பட்ட மக்களும் அடையாளங்களை வெளிப்படுத்தி யது உண்டு..


//   நான் வியந்து பல முறை பார்த்த பெயர் "தலித் எழில் மலை "  (அவரே தான் பா ம க முன்னாள் எம் பி / அமைச்சர் ..)எப்டி இவரால் தைரியமாக தன்னுடைய அடையாளத்தை வெளி காட்ட முடிகிறது...?
                                 அய்யாசாமி பிள்ளை, ராமசாமிஉடையார்  என்று சொல்பவர்கள் "தலித் முருகன், என்று சொல்லும் போது மனதில் உறுத்தல் இல்லாமல் இருக்காது.நம் சமூகம்  அப்டித்தான் உருவாக்கி வைத்திருக்கிறது. இன்று சமுகத்தில் ஒடுக பட்ட மக்கள் தங்களின் சாத்திய அடையாளத்தை மற்ற மக்களின் முன்னால் வெளிபடுத்த தயங்கு கின்றனர்  என்பதே உண்மை.ஒடுக்க பட்ட மக்களில் எதனை பேர் தனது சதியை பெயருக்கு பின்னல் / முன்னால் சேர்க்க விரும்புகின்றனர்..?/


* சாதியின் அடையாளம் கொண்டு வெளிபடுத்த ஒடுக்கப்பட்ட மக்களும் விரும்ப வில்லை . சமுகத்தில் உயர்ந்த இனம் என்று குறிப்பிட படும் இனமாக இருந்தாலும் தம்மை சாதியின் அடையாளம் வழி குறிப்பிட படுவதையும் சிலர் விரும்புவது இல்லை.


கீழே முகிலன் அவர்கள் எழுதிய வடு .. இந்த வடு சாதியை விரும்பாத எல்லோருக்குமாக..
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6509:2009-12-05-08-28-49&catid=148:2008-07-29-15-48-04

0 கருத்துகள்:

கருத்துரையிடுக